என் மலர்
செய்திகள்

வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம்
புதுடெல்லி:
2017-18-ம் ஆண்டில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.4988 கோடியை வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன. 30.8 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை இணை மந்திரி பிரதாப்சுக்லா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2017-18 நிதியாண்டில் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் ரூ.4988 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.
ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ.2434 கோடி அபராதமாக வசூலித்து உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எச்.டி.எப்.சி. (ரூ.590கோடி), ஆக்சிஸ் வங்கி (ரூ.530 கோடி), ஐ.சி.ஐ.சி.ஐ. (ரூ317 கோடி), பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.211 கோடி) ஆகியவை உள்ளன.
கடந்த ஜனவரியில் இருந்து 7 மாதத்தில் ஸ்டேட் வங்கி ரூ.1700 கோடி அபராதமாக வசூலித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Banks






