search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
    X

    நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

    பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடே நிநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சிறந்த இடம் என மாநிலங்களவையில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். #JitendraSingh
    புதுடெல்லி :


    மத்திய பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் மக்களவையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக மக்கள் அபரிமிதமான ஆதரவு தெரிவித்து உள்ளனர். நியூட்ரினோ திட்டம் அமைப்பது தொடர்பாக 2010 ஆம் ஆண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம், விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

    மேலும், இதுகுறித்து தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

    நில அதிர்வு, குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடமாக விளங்குகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #JitendraSingh
    Next Story
    ×