என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்ற மகனை ஒளித்து வைத்துவிட்டு கணவனிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய பெண்
Byமாலை மலர்27 July 2018 9:43 AM GMT (Updated: 27 July 2018 9:43 AM GMT)
மாகாராஷ்டிராவில் சொந்த மகனையே வேறொறு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு கணவனிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மும்பை :
மகாராஷ்டிரா மாநிலம், கோல்காபூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிரிஷ் மற்றும் சுப்ரியா தம்பதியர், இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணமாகி சௌரியா எனும் மகன் உள்ளார். கடந்த சில வருடமாக தம்பதியர்கள் இடையே ஏற்பட்ட பகை காரணமாக இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சுப்ரியா தனது பெற்றோர் துணையுடன் யாருக்கும் தெரியாத இடத்தில் தனது மகனை ஒளித்து வைத்துள்ளார். பின்னர், மகனை பார்க்க கணவனை அனுமதிக்காத சுப்ரியா, பணம் பறிக்கும் முயற்சியில் கணவனை மிரட்டி ரூ.2 கோடி கேட்டுள்ளார்.
இறுதியில், நீதிமன்றம் சென்ற கிரிஷ் நடந்தவைகளை விவரித்து சுப்ரியா மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு தொடருமாறு முறையிட்டுள்ளார். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சுப்ரியா, அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெற்ற தாயே மகனை மறைத்து வைத்துவிட்டு கணவனிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X