என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் கனமழை நீடிப்பு- தண்டவாளம் மூழ்கியதால் நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்
Byமாலை மலர்21 July 2018 6:59 AM GMT (Updated: 21 July 2018 6:59 AM GMT)
ஒடிசா மாநிலத்தில் கனமழை காரணமாக தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியதையடுத்து, அந்த வழியாக வந்த விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது. #OdishaRain #ExpressTrainStuck
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் இடைவிடாமல் கனமழை பெய்ததால் கட்டாக், புவனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராயகடா மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்டவாளம் தெரியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. புவனேஸ்வர்-ஜகதல்பூர் ஹிராகந்த் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்தது. தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாததால், ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவித்தனர். #OdishaRain #ExpressTrainStuck
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் இடைவிடாமல் கனமழை பெய்ததால் கட்டாக், புவனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பேரழிவு ஏற்பட்டதையடுத்து, கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் இன்று பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X