search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 2014-2016 ஆண்டுகளில் மட்டும் 1,10,333
    X

    நாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 2014-2016 ஆண்டுகளில் மட்டும் 1,10,333

    2014-2016 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    நாட்டில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும் என்பன போன்ற வாதங்கள் பல்வேறு தரப்பினாலும் முன்வைக்கப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற மேலவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பங்கள் தொடர்பான எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி கிரெண் ரிஜிஜு, 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் நாடுமுழுவதும் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

    அவற்றில் 2016-ம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 34 ஆயிரத்து 651 வழக்குகளும் மற்றும் 2014ம் ஆண்டில் 36 ஆயிரத்து 735 வழக்குகளும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×