search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்- சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தி.மு.க. எதிர்ப்பு
    X

    பாராளுமன்றம்- சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தி.மு.க. எதிர்ப்பு

    பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #OneNationOneElection #DMK
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும் சட்ட மன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை மத்திய சட்டத்துறை கேட்டு வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி டெல்லியில் சட்ட ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி சிவா எம்.பி. கூறியதாவது:-

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் நோக்கத்தில் உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ரூ.10 ஆயிரம் கோடி செலவு ஏற்படும். எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் ஆகாது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #OneNationOneElection #DMK
    Next Story
    ×