search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாசலப்பிரதேசம் - பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 4 வீரர்கள் பலி
    X

    அருணாசலப்பிரதேசம் - பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 4 வீரர்கள் பலி

    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 4 வீரர்கள் பலியாகினர். #ITBP
    இடாநகர்:

    அருணாசலப்பிரதேசம் மாநிலம் திப்ரூகர் மாவட்டத்தில் உள்ள லிகாபாலி பகுதியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் சுமார் 20க்கு மேற்பட்டோர் இன்று சென்று கொண்டிருந்தனர். 

    அங்கிருந்த சாலை வளைவில் திரும்பும்போது, திடீரென பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, காயமடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். #ITBP
    Next Story
    ×