என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடந்தாலும் பயங்கரவாதிகள் வேட்டை தொடரும் - ராணுவ தளபதி பேட்டி
Byமாலை மலர்20 Jun 2018 9:40 AM GMT (Updated: 20 Jun 2018 9:40 AM GMT)
ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு:
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசிப் குடும்பத்தாரை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரம்ஜான் நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு காஷ்மீரில் ராணுவத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. நேற்று விலக்கி கொண்டதை தொடர்ந்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பேட்டியளித்த பிபின் ராவத், ‘காஷ்மீரில் ரம்ஜானுக்காக நாங்கள் போர் நிறுத்தம் அறிவித்தோம். அதனால் என்ன ஆனது? என்பதை நாம் பார்த்தோம்.
அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் எங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம்போல் பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களது பணிகள் தொடரும். எவ்வித அரசியல் தலையீடும் எங்களுக்கு இருக்காது’ என குறிப்பிட்டார். #JKGovernorRule #BipinRawat
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசிப் குடும்பத்தாரை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரம்ஜான் நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு காஷ்மீரில் ராணுவத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. நேற்று விலக்கி கொண்டதை தொடர்ந்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பேட்டியளித்த பிபின் ராவத், ‘காஷ்மீரில் ரம்ஜானுக்காக நாங்கள் போர் நிறுத்தம் அறிவித்தோம். அதனால் என்ன ஆனது? என்பதை நாம் பார்த்தோம்.
அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் எங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம்போல் பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களது பணிகள் தொடரும். எவ்வித அரசியல் தலையீடும் எங்களுக்கு இருக்காது’ என குறிப்பிட்டார். #JKGovernorRule #BipinRawat
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X