search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து - கோரக்பூர் டாக்டர் கபில்கான் குற்றச்சாட்டு
    X

    பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து - கோரக்பூர் டாக்டர் கபில்கான் குற்றச்சாட்டு

    பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கோரக்பூர் டாக்டர் கபில்கான் குற்றம் சாட்டியுள்ளார். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறந்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானை உ.பி. மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். 

    இதற்கிடையே, கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானின் சகோதரர் காஷிப் ஜமீல் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்நிலையில், பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கோரக்பூர் டாக்டர் கபில்கான் குற்றம் சாட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக கபில் கான் கூறுகையில், எனது சகோதரரை சுட்டவரை 48 மணி நேரத்தில் பிடித்திருக்கலாம். ஆனால் சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் யாரையும் கைது செய்யவில்லை.

    பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
    Next Story
    ×