search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி
    X

    தனியார் பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

    மிசோரம் மாநிலத்தில் தனியார் பேருந்து மலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #aizawlaccident
    அய்சால்:

    மிசோரம் மாநிலம் தலைநகரான அய்சாலில் இருந்து 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சியாகா நகருக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு அய்சால் நகரிலிருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பங்ஸ்வால் கிராமத்திற்கு அருகில் செல்லும் போது சாலை ஈரமாக இருந்ததால் டிரைவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பேருந்து மலையில் இருந்து கீழே உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    விபத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. மோசமான வானிலையால் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மிசோரம் மாநிலம் உள்துறை மந்திரி ஆர். லால்சிர்லியானா விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #aizawlaccident

    Next Story
    ×