என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ அதிகாரி மர்ம மரணம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள முகாமில் ராணுவ அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு:
ஜம்மு நகரில் ராணுவ பயிற்சி முகாம் அமைந்துள்ளது. இன்று காலை ஒடிசாவை சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சனத் கபி (51), சுய நினைவற்ற நிலையில் அங்கு மயங்கி கிடந்தார்.
இதைக்கண்ட சக அதிகாரிகள் அவரை மீட்டு ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும், ராணுவத்திடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story






