என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுற்றுலா வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் - கோவாவில் 9 பேருக்கு நீதிமன்றக் காவல்
Byமாலை மலர்31 May 2018 8:48 AM GMT (Updated: 31 May 2018 8:48 AM GMT)
கோவாவிற்கு சுற்றுலா வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட புனே வாலிபர்கள் 9 பேரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GoaCourt #GoaTouristsRemand
பனாஜி:
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கோவாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு வந்த அவர்கள், அங்கு அமர்ந்திருந்த 16 வயது பெண்ணை செல்போன்களில் படம் எடுத்துள்ளனர். இதனை அந்த பெண்ணின் அண்ணன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புனே வாலிபர்கள், அந்த சிறுவனை தாக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரும், மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்குள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 சிறுவர்கள் தவிர மற்ற 9 பேரும் இன்று மபுசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். சிறுவர்கள் இரண்டு பேரும் பனாஜி அருகே உள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #GoaCourt #GoaTouristsRemand
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கோவாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு வந்த அவர்கள், அங்கு அமர்ந்திருந்த 16 வயது பெண்ணை செல்போன்களில் படம் எடுத்துள்ளனர். இதனை அந்த பெண்ணின் அண்ணன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புனே வாலிபர்கள், அந்த சிறுவனை தாக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரும், மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்குள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 சிறுவர்கள் தவிர மற்ற 9 பேரும் இன்று மபுசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். சிறுவர்கள் இரண்டு பேரும் பனாஜி அருகே உள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #GoaCourt #GoaTouristsRemand
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X