என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ம.பி.யில் ஒருவர் அடித்துக்கொலை - 4 பேர் கைது
Byமாலை மலர்20 May 2018 10:54 AM GMT (Updated: 20 May 2018 10:54 AM GMT)
மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #cowslaughter
போபால்:
மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டத்தில் அஞ்சர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அங்கு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் அடித்துகொல்லப்பட்டார். மற்றொருவர் கடுமையான தாக்குதலுக்குட்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இது குறித்து சட்னா மாவட்ட போலீஸ் எஸ்.பி.ராஜேஷ் ஹெங்கெர்கர் கூறியதாவது, அஞ்சர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருவர் மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதாக வெள்ளி அன்று அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது. அதைதொடர்ந்து, 4 பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு விரைந்து அங்கு இறைச்சிக்காக மாட்டை வெட்டிய இரண்டு பேர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், சிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த ஷகில் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் இருந்த மாட்டின் இறைச்சியை போலீசார் கைப்பற்றி இது குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பவன் சிங், விஜர் சிங், போல் சிங் மற்றும் நாரயண் சிங் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க 400 போலீசார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #cowslaughter
மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டத்தில் அஞ்சர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அங்கு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் அடித்துகொல்லப்பட்டார். மற்றொருவர் கடுமையான தாக்குதலுக்குட்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இது குறித்து சட்னா மாவட்ட போலீஸ் எஸ்.பி.ராஜேஷ் ஹெங்கெர்கர் கூறியதாவது, அஞ்சர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருவர் மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதாக வெள்ளி அன்று அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது. அதைதொடர்ந்து, 4 பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு விரைந்து அங்கு இறைச்சிக்காக மாட்டை வெட்டிய இரண்டு பேர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், சிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த ஷகில் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் இருந்த மாட்டின் இறைச்சியை போலீசார் கைப்பற்றி இது குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பவன் சிங், விஜர் சிங், போல் சிங் மற்றும் நாரயண் சிங் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க 400 போலீசார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #cowslaughter
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X