search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லக்னோவில் ஒரு கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல் - மூன்று பேர் கைது
    X

    லக்னோவில் ஒரு கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல் - மூன்று பேர் கைது

    உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் சுமார் ஒரு கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயன்ற 3 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர். #Heroinseized
    லக்னோ:

    பீகார் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கடத்தமுயன்ற தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். லக்னோ-பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கைது நடந்துள்ளது.

    பிடிபட்ட170 கிராம் எடையுள்ள ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு 1 கோடியாகும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட மூவரும் உத்தரப்பிரதேசம் மாநிலம் பாரபாங்கி பகுதியை சேர்ந்த மால்டி வெர்மா, போலா சிங் மற்றும் குஷல் வெர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. #Heroinseized
    Next Story
    ×