search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவோயிஸ்ட் வேட்டையில் வெற்றி - இரு மாவட்ட போலீசாருக்கு ஒடிசா முதல்வர் ரொக்கப் பரிசு
    X

    மாவோயிஸ்ட் வேட்டையில் வெற்றி - இரு மாவட்ட போலீசாருக்கு ஒடிசா முதல்வர் ரொக்கப் பரிசு

    ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான வேட்டையை வெற்றிகரமாக நடத்திய இரு மாவட்ட போலீசாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #OdishaMaoistoperation #Cashrewards
    புவனேஸ்வர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஒடிசாவில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் தொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தின்போது, போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்று சிறப்பாக செயலாற்றிய அம்மாவட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த நவீன் பட்நாயக் இரு மாவட்ட போலீசாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தார். #OdishaMaoistoperation #Cashrewards
    Next Story
    ×