search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள் அவசர கூட்டம்
    X

    டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள் அவசர கூட்டம்

    கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அக்கட்சி எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    கர்நாடகா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. 99 இடங்களை பெற்று அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உயர்ந்துள்ளது. மேலும் அக்கட்சி வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    224 இடங்களை கொண்ட கர்நாடகா சட்டசபையில், தேர்தல் நடைபெற்ற 222 இடங்களில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான மந்திர எண்ணான 112 என்ற இலக்கத்தை நெருங்க முடியவில்லை. முன்னிலை வகித்து வரும் இடங்களையும் சேர்த்து மொத்தம் 104 இடங்களில் மட்டுமே அதிகபட்சமாக பா.ஜ.க. வேட்பாளர்கள் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


    இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலுகத்தில் அக்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். #karnatakaverdict #karnatakaelection2018
    Next Story
    ×