என் மலர்
செய்திகள்

இந்திய ராணுவ தளபதி நாளை இலங்கை பயணம்
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நாளை இலங்கைக்கு முதல் முறையாக பயணம் செய்ய உள்ளார். #BipinRawat
புதுடெல்லி:
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நாளை இலங்கை செல்கிறார். இந்திய ராணுவ தளபதியாக அவர் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
கண்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு ஆய்வுகூடத்தை தொடங்கி வைக்கிறார்.அதைத்தொடர்ந்து, தியட்டலாவா பகுதியில் அமைந்துள்ள இலங்கை ராணுவ பயிற்சி மையத்தை பார்வையிடுகிறார்.
மேலும், இந்த பயணத்தின் போது இலங்கையின் மூத்த அரசியல்தலைவர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து பேச உள்ளார் என இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கண்டி மற்றும் திரிகோணமலை பகுதியில் இலங்கையின் பிராந்திய ராணுவ தளபதிகளை அவர் சந்திக்கிறார். #BipinRawat
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நாளை இலங்கை செல்கிறார். இந்திய ராணுவ தளபதியாக அவர் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
கண்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு ஆய்வுகூடத்தை தொடங்கி வைக்கிறார்.அதைத்தொடர்ந்து, தியட்டலாவா பகுதியில் அமைந்துள்ள இலங்கை ராணுவ பயிற்சி மையத்தை பார்வையிடுகிறார்.
மேலும், இந்த பயணத்தின் போது இலங்கையின் மூத்த அரசியல்தலைவர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து பேச உள்ளார் என இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கண்டி மற்றும் திரிகோணமலை பகுதியில் இலங்கையின் பிராந்திய ராணுவ தளபதிகளை அவர் சந்திக்கிறார். #BipinRawat
Next Story