search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டவிரோத நிதி பரிவர்த்தனை - டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய்க்கு 3 நாள் சிபிஐ காவல்
    X

    சட்டவிரோத நிதி பரிவர்த்தனை - டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய்க்கு 3 நாள் சிபிஐ காவல்

    சட்டவிரோத நிதி பரிவர்த்தனை தொடர்பாக கைது செய்யப்பட்ட டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராயை 3 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்துள்ளது. #journalistUpendraRai #Delhicourt #CBIcustody
    புதுடெல்லி:

    சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

    இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

    நேற்று முழுவதும் உபேந்திரா ராயிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்துள்ளது. #journalistUpendraRai #Delhicourt #CBIcustody
    Next Story
    ×