என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று ஜப்பான் சென்றார்
Byமாலை மலர்28 March 2018 4:58 PM GMT (Updated: 28 March 2018 4:58 PM GMT)
ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரியின் அழைப்பை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று டோக்கியோ சென்றார். #SushmaSwaraj #JapanVisit
புதுடெல்லி:
இந்தியாவின் உள்கட்டமைப்பு, உற்பத்தி, நிதிச்சந்தை ஆகிய துறைகளில் ஜப்பான் அரசு ஏராளமாக முதலீடு செய்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறை தொடர்புகளை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்திருந்தபோது இந்த உறவுகள் மேலும் பலம் அடைந்தது.
இந்நிலையில், இந்தியா - ஜப்பான் இடையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி டாரா கோனோ அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக சுஷ்மா சுவராஜ் இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு டோக்கியோ சென்றார். இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையிலான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக இருநாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் வெகு விரிவாக விவாதிக்கவுள்ளனர். #SushmaSwaraj #JapanVisit #tamilnews
இந்தியாவின் உள்கட்டமைப்பு, உற்பத்தி, நிதிச்சந்தை ஆகிய துறைகளில் ஜப்பான் அரசு ஏராளமாக முதலீடு செய்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறை தொடர்புகளை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்திருந்தபோது இந்த உறவுகள் மேலும் பலம் அடைந்தது.
இந்நிலையில், இந்தியா - ஜப்பான் இடையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி டாரா கோனோ அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக சுஷ்மா சுவராஜ் இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு டோக்கியோ சென்றார். இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையிலான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக இருநாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் வெகு விரிவாக விவாதிக்கவுள்ளனர். #SushmaSwaraj #JapanVisit #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X