என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரானைட் நிறுவனத்தின் ரூ.38 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
Byமாலை மலர்2 March 2018 4:27 AM GMT (Updated: 2 March 2018 4:27 AM GMT)
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக கிரானைட் நிறுவனத்தின் ரூ.38 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
புதுடெல்லி:
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் பெரியகருப்பன், பாலகிருஷ்ணன், சுப்பையா ஆகியோர் நடத்தி வந்த குமார் கிரானைட்ஸ் மற்றும் குமார் எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்த 2 நிறுவனங்களும் அரசு புறம்போக்கு மற்றும் தனியார் இடங்களில் அனுமதியில்லாமல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது. மேலும் போக்குவரத்திற்காக போலியான ஆவணங்கள் தயாரித்து கிரானைட் கற்களை இடமாற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முறைகேடாக விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் அதிக அளவில் அசையா சொத்துகளை வாங்கி உள்ளனர்.
எனவே பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனம் மற்றும் அந்த நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் 158 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.37 கோடியே 79 லட்சம் ஆகும்.
இந்த தகவல் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் பெரியகருப்பன், பாலகிருஷ்ணன், சுப்பையா ஆகியோர் நடத்தி வந்த குமார் கிரானைட்ஸ் மற்றும் குமார் எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்த 2 நிறுவனங்களும் அரசு புறம்போக்கு மற்றும் தனியார் இடங்களில் அனுமதியில்லாமல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது. மேலும் போக்குவரத்திற்காக போலியான ஆவணங்கள் தயாரித்து கிரானைட் கற்களை இடமாற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முறைகேடாக விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் அதிக அளவில் அசையா சொத்துகளை வாங்கி உள்ளனர்.
எனவே பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனம் மற்றும் அந்த நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் 158 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.37 கோடியே 79 லட்சம் ஆகும்.
இந்த தகவல் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X