என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீருக்கு அடியில் கங்கை ஆற்றின் குறுக்கே சுரங்க ரெயில் பாதை
Byமாலை மலர்15 April 2017 5:54 AM GMT (Updated: 15 April 2017 5:54 AM GMT)
இந்தியாவில் முதல் முறையாக கங்கை ஆற்றின் குறுக்கே தண்ணீருக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப்படுகிறது.
கொல்கத்தா:
இந்தியாவில் பல இடங்களில் ரெயில்வே சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒரு இடத்தில் கூட தண்ணீருக்கு அடியில் சுரங்க பாதைகள் அமைக்கப்படவில்லை.
இந்தியாவில் முதல் முறையாக கங்கை ஆற்றின் குறுக்கே தண்ணீருக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் கங்கை ஆற்றை ஹூக்ளி நதி என்று அழைக்கிறார்கள். கொல்கத்தாவை ஒட்டி இந்த ஆற்றின் குறுக்கே சுரங்க பாதை அமைக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதன்படி கங்கை ஆற்றின் குறுக்கே சுரங்க பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. 520 மீட்டர் நீளத்துக்கு ஆற்றின் தரை மட்டத்தில் இருந்து 30 மீட்டருக்கு கீழே இந்த சுரங்க பாதையை அமைக்கின்றனர்.
இதற்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அவை பணிகளை தொடங்கி உள்ளன. 2 மாதத்தில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த பாதை அமைக்கப்பட்டு விட்டால் கொல்கத்தாவில் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் பெருமளவு போக்குவரத்து குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பல இடங்களில் ரெயில்வே சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒரு இடத்தில் கூட தண்ணீருக்கு அடியில் சுரங்க பாதைகள் அமைக்கப்படவில்லை.
இந்தியாவில் முதல் முறையாக கங்கை ஆற்றின் குறுக்கே தண்ணீருக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் கங்கை ஆற்றை ஹூக்ளி நதி என்று அழைக்கிறார்கள். கொல்கத்தாவை ஒட்டி இந்த ஆற்றின் குறுக்கே சுரங்க பாதை அமைக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதன்படி கங்கை ஆற்றின் குறுக்கே சுரங்க பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. 520 மீட்டர் நீளத்துக்கு ஆற்றின் தரை மட்டத்தில் இருந்து 30 மீட்டருக்கு கீழே இந்த சுரங்க பாதையை அமைக்கின்றனர்.
இதற்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அவை பணிகளை தொடங்கி உள்ளன. 2 மாதத்தில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த பாதை அமைக்கப்பட்டு விட்டால் கொல்கத்தாவில் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் பெருமளவு போக்குவரத்து குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X