என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது: விரைவில் புதிய சட்டம்
Byமாலை மலர்10 April 2017 10:35 AM GMT (Updated: 10 April 2017 10:35 AM GMT)
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலையில் சேருவதை தடை செய்யும் புதிய சட்டத்தை கொண்டு வர அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.
கவுகாத்தி:
உலகளவில் மக்கள் தொகையில் 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அனைவருக்கும் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெறுவது மிகுந்த சிரமமாக உள்ளது.
இந்த நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்திட அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான புதிய மக்கள் தொகை கொள்கை வரைவை கல்வித்துறை மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா இன்று வெளியிட்டார். அப்போது, அவர் கூறுகையில், “மக்கள் தொகை கொள்கை வரைவின்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசு வேலை பெறுவதற்கான தகுதி கிடையாது என பரிந்துரைத்துள்ளோம். அனைத்து பெண்களுக்கும் கல்லூரி வரை இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இந்த கொள்கையின் நோக்கம்.
கல்விக் கட்டணம், போக்குவரத்து, புத்தகங்கள் மற்றும் விடுதி உணவுக்கட்டணம் ஆகியவற்றை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அரசு வேலை மற்றும் தேர்தல்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது நடைபெற குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த கொள்கை இறுதிவடிவம் பெற்றால் மகிழ்ச்சி” என்றார்.
உலகளவில் மக்கள் தொகையில் 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அனைவருக்கும் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெறுவது மிகுந்த சிரமமாக உள்ளது.
இந்த நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்திட அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான புதிய மக்கள் தொகை கொள்கை வரைவை கல்வித்துறை மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா இன்று வெளியிட்டார். அப்போது, அவர் கூறுகையில், “மக்கள் தொகை கொள்கை வரைவின்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசு வேலை பெறுவதற்கான தகுதி கிடையாது என பரிந்துரைத்துள்ளோம். அனைத்து பெண்களுக்கும் கல்லூரி வரை இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இந்த கொள்கையின் நோக்கம்.
கல்விக் கட்டணம், போக்குவரத்து, புத்தகங்கள் மற்றும் விடுதி உணவுக்கட்டணம் ஆகியவற்றை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அரசு வேலை மற்றும் தேர்தல்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது நடைபெற குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த கொள்கை இறுதிவடிவம் பெற்றால் மகிழ்ச்சி” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X