என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கோர்ட்டு அவமதிப்பு: சுப்ரீம் கோர்ட்டு பிடி வாரண்ட் - நீதிபதி கர்ணன் கைது?
Byமாலை மலர்17 March 2017 12:47 PM IST (Updated: 17 March 2017 12:47 PM IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. அவரது வீட்டுக்கு விரைந்துள்ளார்.
கொல்கத்தா:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. அவரது வீட்டுக்கு விரைந்துள்ளார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியிட மாற்றத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது சென்னை ஐகோர்ட் பதிவாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தற்போது கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்படி, கோர்ட்டின் முன்னர் அவர் ஆஜராக தவறியதால் பத்தாயிரம் ரூபாய் பிணைத்தொகையை சொந்த ஜாமினாக செலுத்தும் வகையிலான பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கிடையில், தனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் மீது 14 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக கொல்கத்தா நீதிபதி கர்ணன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் இன்று பகல் 12 மணியளவில் நீதிபதி கர்ணனின் வீட்டுக்கு விரைந்துள்ளார்.
வாரண்ட்டில் கண்டுள்ளபடி, அவர் போலீசாரிடம் தன்னை ஒப்படைத்து, பின்னர் பத்தாயிரம் ரூபாய் சொந்த ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீதிபதி கர்ணன் வீட்டின் முன்னர் ஏராளமான ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. அவரது வீட்டுக்கு விரைந்துள்ளார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியிட மாற்றத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது சென்னை ஐகோர்ட் பதிவாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தற்போது கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்படி, கோர்ட்டின் முன்னர் அவர் ஆஜராக தவறியதால் பத்தாயிரம் ரூபாய் பிணைத்தொகையை சொந்த ஜாமினாக செலுத்தும் வகையிலான பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கிடையில், தனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் மீது 14 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக கொல்கத்தா நீதிபதி கர்ணன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் இன்று பகல் 12 மணியளவில் நீதிபதி கர்ணனின் வீட்டுக்கு விரைந்துள்ளார்.
வாரண்ட்டில் கண்டுள்ளபடி, அவர் போலீசாரிடம் தன்னை ஒப்படைத்து, பின்னர் பத்தாயிரம் ரூபாய் சொந்த ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீதிபதி கர்ணன் வீட்டின் முன்னர் ஏராளமான ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X