என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தை மலேரியா இல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில அரசு புதிய முயற்சி
Byமாலை மலர்15 March 2017 5:59 PM GMT (Updated: 15 March 2017 5:59 PM GMT)
அடுத்த 5 வருடத்திற்குள் குஜராத்தை மலேரியா இல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காந்திநகர்:
அடுத்த 5 வருடத்தில் குஜராத் மாநிலத்தை மலேரியா அல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில சட்டசபையில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்க குஜராத் அரசு சார்பில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, வருகிற 2022-க்குள் குஜராத் மாநிலத்தில் மலேரியாவை ஒழிக்கும் முயற்சியாக உதவி ஹெல்ப்லைன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷங்கர் சவுத்ரி சட்டசபையில் இதனை அறிவித்தார். குஜராத்தில் மலேரியாவை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கான திட்டங்கள் இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளதாகவும், மலேரியா தொற்று உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 104 என்ற சிறப்பு உதவி எண்ணையும் அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மலேரியா தொற்று இருப்பதாக மாநிலத்தின் எந்த இடத்தில் இருந்தாலும் மக்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அவர்களுக்கு தேவையான உதவி மற்றும் சிகிச்சையை அவர்களது இடத்திற்கே சென்று வழங்கவும் இந்த திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட உள்ளதாகவும் சவுத்ரி கூறினார்.
அடுத்த 5 வருடத்தில் குஜராத் மாநிலத்தை மலேரியா அல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில சட்டசபையில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்க குஜராத் அரசு சார்பில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, வருகிற 2022-க்குள் குஜராத் மாநிலத்தில் மலேரியாவை ஒழிக்கும் முயற்சியாக உதவி ஹெல்ப்லைன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷங்கர் சவுத்ரி சட்டசபையில் இதனை அறிவித்தார். குஜராத்தில் மலேரியாவை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கான திட்டங்கள் இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளதாகவும், மலேரியா தொற்று உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 104 என்ற சிறப்பு உதவி எண்ணையும் அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மலேரியா தொற்று இருப்பதாக மாநிலத்தின் எந்த இடத்தில் இருந்தாலும் மக்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அவர்களுக்கு தேவையான உதவி மற்றும் சிகிச்சையை அவர்களது இடத்திற்கே சென்று வழங்கவும் இந்த திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட உள்ளதாகவும் சவுத்ரி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X