என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக செயல்படும் வருமானவரி அதிகாரிகள்: சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு
Byமாலை மலர்15 March 2017 5:42 AM GMT (Updated: 15 March 2017 5:42 AM GMT)
கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக வருமான வரித்துறையினர் செயல்படுவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி. டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வருமானத்தை மீறி பல வகைகளில் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். இது சம்மந்தமாக சென்னையில் உள்ள வருமான வரி அதிகாரிகளுக்கு போதிய ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்துள்ளன.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் பல முதலீடுகளை செய்துள்ளார். சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பல்வேறு கணக்குகளை தொடங்கி உள்ளார். இதுசம்மந்தமான அனைத்து தகவல்களும் கிடைத்தும் வருமான வரித்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். பெரும்பாலான அதிகாரிகள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டார்கள். அவர்கள் தான் இப்போதும் அதிகாரிகளாக இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள்.
எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது சம்மந்தமாக நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அவர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி. டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வருமானத்தை மீறி பல வகைகளில் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். இது சம்மந்தமாக சென்னையில் உள்ள வருமான வரி அதிகாரிகளுக்கு போதிய ஆதாரங்களுடன் தகவல்கள் கிடைத்துள்ளன.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் பல முதலீடுகளை செய்துள்ளார். சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பல்வேறு கணக்குகளை தொடங்கி உள்ளார். இதுசம்மந்தமான அனைத்து தகவல்களும் கிடைத்தும் வருமான வரித்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். பெரும்பாலான அதிகாரிகள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டார்கள். அவர்கள் தான் இப்போதும் அதிகாரிகளாக இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள்.
எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது சம்மந்தமாக நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அவர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X