என் மலர்
செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது இன்று பகல் 12 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் ஜம்முவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அங்கு நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பினருக்கும் இடையில் உயிர் பலி ஏதுமில்லை என தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது இன்று பகல் 12 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் ஜம்முவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அங்கு நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பினருக்கும் இடையில் உயிர் பலி ஏதுமில்லை என தெரிகிறது.
Next Story