என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியீடு
By
மாலை மலர்2 Feb 2017 1:54 PM GMT (Updated: 2 Feb 2017 1:54 PM GMT)

தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டு சென்றது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவராத நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு போராட்டங்களை நடத்தியதால், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து 23-ம் தேதியன்று நடைபெற்ற சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு வந்தன.
தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. நாட்டு மாடு இனங்களை காக்கும் பொருட்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டு சென்றது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவராத நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு போராட்டங்களை நடத்தியதால், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து 23-ம் தேதியன்று நடைபெற்ற சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு வந்தன.
தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. நாட்டு மாடு இனங்களை காக்கும் பொருட்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
