என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இந்தியாவில் தொழில்நுட்ப கல்வித் தரத்தை மேம்படுத்த உலக வங்கியுடன் ஒப்பந்தம்
By
மாலை மலர்2 Feb 2017 12:55 PM GMT (Updated: 2 Feb 2017 12:55 PM GMT)

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், சுமார் 201.50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் உலக வங்கியுடன் கையெழுத்தாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் சுமார் 7064 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவை பெறும் வகையிலும், கல்வி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை அளிக்கும் நோக்கத்திலும் மத்திய அரசானது, உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பின் தங்கிய மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தரமான தொழில்நுட்ப பாடத்திட்டத்தை இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
