என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன்: முலாயம் சிங் அதிரடி பேட்டி
Byமாலை மலர்29 Jan 2017 4:03 PM GMT (Updated: 29 Jan 2017 4:03 PM GMT)
சாமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என்று முலாயம் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சியுடன் ஆளும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்துள்ளது.
இதனையடுத்து ராகுல் காந்தியுடம் அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதனை தொடர்ந்து இருவரும் லக்னோ நகரின் தெருக்களில் கூட்டாக பிரச்சாரம் செய்தனர்.
இந்நிலையில், சாமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என்று முலாயம் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு எதிரானவன். இந்த கூட்டணிக்கு
ஆதரவாக எங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன். சமாஜ்வாடி கட்சிக்கு தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் சக்தி உள்ளது” என்றார்.
ஏற்கனவே சமாஜ்வாடி கட்சிக்குள் உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக வெடித்து, தற்போது சற்றே சுமூகமாக சூழல் உருவாகி வந்துள்ளதாக கருதப்பட்ட நிலையில், முலாயம் சிங் பேட்டி மீண்டும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X