என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீர்:பனிச்சரிவில் சிக்கியிருந்த 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு
Byமாலை மலர்28 Jan 2017 5:45 PM GMT (Updated: 28 Jan 2017 5:45 PM GMT)
ஜம்மு காஷ்மீரின் மார்ச்சில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்டு வரும் பனிச்சரிவால், அடிவாரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் ராணுவ வீரர்களும் சிக்கி உயிரிழப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தவகையில் எல்லையோர மாவட்டமான பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் கடந்த 25–ந் தேதி கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள ராணுவ முகாமுக்கு திரும்பி கொண்டிருந்த வீரர்கள் மீது இந்த பனிக்கட்டிகள் விழுந்து மூடின. இதில் 15 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில், மார்ச்சில் செக்டாரில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து வந்த ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது பனிச்சரிவில் சிக்கி இருந்த 5 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 140 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்டு வரும் பனிச்சரிவால், அடிவாரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் ராணுவ வீரர்களும் சிக்கி உயிரிழப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தவகையில் எல்லையோர மாவட்டமான பந்திப்போராவின் குரேஸ் பகுதியில் கடந்த 25–ந் தேதி கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள ராணுவ முகாமுக்கு திரும்பி கொண்டிருந்த வீரர்கள் மீது இந்த பனிக்கட்டிகள் விழுந்து மூடின. இதில் 15 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில், மார்ச்சில் செக்டாரில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து வந்த ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது பனிச்சரிவில் சிக்கி இருந்த 5 ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 5 ராணுவ வீரர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 140 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X