என் மலர்
செய்திகள்

உ.பி. பா.ஜ.க. தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
உத்தர பிரதேசத்தில் இன்று வெளியிட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
லக்னோ:
உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு பிரச்சரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்தல் அறிக்கையில் பல்வேறு சலுகை அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* உத்தர பிரதேசத்தில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
* தகுதிமிக்க மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* கரும்பு விவசாயிகளுக்கு 120 நாட்களுக்குள் அனைத்து நிலுவைத்தொகையும் பட்டுவாடா செய்யப்படும்.
* உணவு பதப்படுத்துதல் பூங்கா அமைக்கப்படும்.
* 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும், ஏழைகளுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
* பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* மாணவர்களுக்கு எந்த பாரபட்சமும் இன்றி லேப்டாப்கள் வழங்கப்படுவதுடன், மாதம் 1ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும்.
* ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5000 ஆயிரம் வழங்கப்படும். விதவை பென்சன் பெறுவதற்கு வயது வரம்பு ஏதும் இருக்காது.
உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு பிரச்சரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்தல் அறிக்கையில் பல்வேறு சலுகை அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* உத்தர பிரதேசத்தில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
* தகுதிமிக்க மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* கரும்பு விவசாயிகளுக்கு 120 நாட்களுக்குள் அனைத்து நிலுவைத்தொகையும் பட்டுவாடா செய்யப்படும்.
* உணவு பதப்படுத்துதல் பூங்கா அமைக்கப்படும்.
* 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும், ஏழைகளுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
* பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்புக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* மாணவர்களுக்கு எந்த பாரபட்சமும் இன்றி லேப்டாப்கள் வழங்கப்படுவதுடன், மாதம் 1ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும்.
* ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5000 ஆயிரம் வழங்கப்படும். விதவை பென்சன் பெறுவதற்கு வயது வரம்பு ஏதும் இருக்காது.
Next Story