என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது-தனித்து போட்டி தான்: சிவசேனா திட்டவட்டம்
Byமாலை மலர்27 Jan 2017 2:28 AM GMT (Updated: 27 Jan 2017 2:28 AM GMT)
பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 186 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பா.ஜ.க. சிவசேனா இடையே கூட்டணி நீடித்து வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இருதரப்பினரிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், கட்சியின் 50 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி வைத்ததால் 25 ஆண்டுகள் வீணாகி விட்டது. கூட்டணியில் வெறுப்பூட்டும் தன்மை ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்துத்துவா கொள்கைகளில் பா.ஜ.க.விற்கு ஆதரவு அளித்து வந்துள்ளோம். சிவசேனாவிற்கு பதவி பேராசை எதுவுமில்லை. சிவசேனாவை குறைத்து மதிப்பிட்டவர்கள் தேர்தலில் தோற்றுப்போவார்கள்” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 186 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பா.ஜ.க. சிவசேனா இடையே கூட்டணி நீடித்து வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இருதரப்பினரிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், கட்சியின் 50 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி வைத்ததால் 25 ஆண்டுகள் வீணாகி விட்டது. கூட்டணியில் வெறுப்பூட்டும் தன்மை ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்துத்துவா கொள்கைகளில் பா.ஜ.க.விற்கு ஆதரவு அளித்து வந்துள்ளோம். சிவசேனாவிற்கு பதவி பேராசை எதுவுமில்லை. சிவசேனாவை குறைத்து மதிப்பிட்டவர்கள் தேர்தலில் தோற்றுப்போவார்கள்” என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X