என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கான்பூர், ஆந்திரா ரெயில் விபத்து: விசாரணை செய்ய தேசிய புலனாய்வு முகமை முடிவு
Byமாலை மலர்26 Jan 2017 5:10 PM GMT (Updated: 26 Jan 2017 5:10 PM GMT)
கான்பூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கள் குறித்து விசாரணை செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
சத்தீஷ்கர் மாநிலம் ஜக்தால்பூர் நகரில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேசுவரத்துக்கு சென்று கொண்டிருந்த ஹிராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 20–ந்தேதி இரவு ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொனேரு என்ற இடத்துக்கு அருகே திடீரென தடம் புரண்டதில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
இதே போல் கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதம் 20–ந்தேதி இந்தூர்–பாட்னா ரெயில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம் புரண்டதில் 150 பேர் உயிரிழந்தனர்.
இந்த 2 விபத்துகளுக்கும் காரணம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் நாசவேலையாக இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
இந்த நிலையில் விபத்துகள் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச ரெயில் விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ள பீகாரை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு அதிகாரிகள் பீகாருக்கு விரைந்து உள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலம் ஜக்தால்பூர் நகரில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேசுவரத்துக்கு சென்று கொண்டிருந்த ஹிராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 20–ந்தேதி இரவு ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொனேரு என்ற இடத்துக்கு அருகே திடீரென தடம் புரண்டதில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
இதே போல் கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதம் 20–ந்தேதி இந்தூர்–பாட்னா ரெயில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம் புரண்டதில் 150 பேர் உயிரிழந்தனர்.
இந்த 2 விபத்துகளுக்கும் காரணம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் நாசவேலையாக இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
இந்த நிலையில் விபத்துகள் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச ரெயில் விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ள பீகாரை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு அதிகாரிகள் பீகாருக்கு விரைந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X