என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம.பி. முதல்-மந்திரி அறிவிப்பு
Byமாலை மலர்26 Jan 2017 4:02 PM GMT (Updated: 26 Jan 2017 4:29 PM GMT)
மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்வதாக முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலத்தில் குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்தார்.
அவர் பேசுகையில், ‘‘பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாலும், அவை குப்பைகள் ஆக்கப்படுவதாலும் நமது சுற்றுச்சூழலும், சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சாப்பிடுவதால் அவை இறந்து போகின்றன. எனவே பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்கிறேன். பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பை நிறுத்திக்கொள்ள 3 மாதங்கள் அவகாசம் வழங்குகிறேன்’’ என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்ஜிக்கல் தாக்குதலையும், பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் வெகுவாக பாராட்டினார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்தார்.
அவர் பேசுகையில், ‘‘பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாலும், அவை குப்பைகள் ஆக்கப்படுவதாலும் நமது சுற்றுச்சூழலும், சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சாப்பிடுவதால் அவை இறந்து போகின்றன. எனவே பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்கிறேன். பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பை நிறுத்திக்கொள்ள 3 மாதங்கள் அவகாசம் வழங்குகிறேன்’’ என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்ஜிக்கல் தாக்குதலையும், பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் வெகுவாக பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X