என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்துறை மந்திரியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் சந்திப்பு
Byமாலை மலர்19 Jan 2017 12:42 PM GMT (Updated: 19 Jan 2017 12:42 PM GMT)
டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை ஜம்மு - காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி இன்று சந்தித்தார். புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரியின் அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மற்றும் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
மேலும், ஜம்மு - காஷ்மீர் சட்ட சபையில், மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளை மீண்டும் குடியேற்றுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதையும், அது குறித்த விபரங்களை மந்திரியிடம், முப்தி எடுத்துக் கூறி ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ராஜ்நாத் சிங்கிடம், மெகபூபா முப்தி எடுத்துக் கூறியதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X