என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக எதுவும் செய்ய முடியாது; தமிழக அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் - மோடி
Byமாலை மலர்19 Jan 2017 7:08 AM GMT (Updated: 19 Jan 2017 3:49 PM GMT)
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று கூறிய பிரதமர் மோடி, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். அப்போது தமிழர்களின் உணர்வுகள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளதை எடுத்துரைத்த முதல்வர், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது, ஜல்லிக்கட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை பாராட்டிய மோடி, இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். அதேசமயம், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று மோடி உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தின் வறட்சி நிலை குறித்து ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு வரும் என்றும், வறட்சியை சமாளிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.
எனவே, இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் என்ற கோரிக்கையை மோடி ஏற்கவில்லை. ஏற்கனவே கூறியதுபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பும் வந்தபிறகுதான் மத்திய அரசு தனது முடிவினை தெளிவுபடுத்தும். மோடியின் இந்த முடிவினால் அதிருப்தி அடைந்த போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் ஓயாது என்று கூறியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போராட்டக்களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் இந்த பதில் எதிர்பார்த்த ஒன்றுதான் என்று போராட்டக் களத்தில் இருக்கும் பலர் கூறுகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். அப்போது தமிழர்களின் உணர்வுகள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளதை எடுத்துரைத்த முதல்வர், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது, ஜல்லிக்கட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை பாராட்டிய மோடி, இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். அதேசமயம், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று மோடி உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தின் வறட்சி நிலை குறித்து ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு வரும் என்றும், வறட்சியை சமாளிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.
எனவே, இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் என்ற கோரிக்கையை மோடி ஏற்கவில்லை. ஏற்கனவே கூறியதுபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பும் வந்தபிறகுதான் மத்திய அரசு தனது முடிவினை தெளிவுபடுத்தும். மோடியின் இந்த முடிவினால் அதிருப்தி அடைந்த போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் ஓயாது என்று கூறியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போராட்டக்களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் இந்த பதில் எதிர்பார்த்த ஒன்றுதான் என்று போராட்டக் களத்தில் இருக்கும் பலர் கூறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X