என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் ஆற்றைக் கடக்க முயன்ற பெண், மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கி பலி
Byமாலை மலர்15 Jan 2017 1:50 PM GMT (Updated: 15 Jan 2017 1:50 PM GMT)
உத்தர பிரதேசத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் உள்ள ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனிதா தேவி (வயது 35). இவர் தனது மூன்று குழந்தையுடன் (பிரதிமா (12), அன்னு (7), கபில் (7)) ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மாவட்டத்தில் உள்ள பர்மா ஆற்றை கடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இந்த நான்கு பேரையும் ஆற்று நீர் இழுத்துச் சென்றது. குழந்தைகளை காப்பாற்றியே ஆக வேண்டும் எண்ணத்தில் மூன்று குழந்தைகளின் தாயார் சுனிதா தேவி, டையர் டியூபை பிடித்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் படகை நோக்கி முன்னேறினார்.
ஆனால் மூன்று குழந்தைகளுடன் கயிற்றை பிடித்துக் கொண்டு அவரால் படகிற்கு முன்னேற முடியவில்லை. இதனால் அவர் மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்கள் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனிதா தேவி (வயது 35). இவர் தனது மூன்று குழந்தையுடன் (பிரதிமா (12), அன்னு (7), கபில் (7)) ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மாவட்டத்தில் உள்ள பர்மா ஆற்றை கடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இந்த நான்கு பேரையும் ஆற்று நீர் இழுத்துச் சென்றது. குழந்தைகளை காப்பாற்றியே ஆக வேண்டும் எண்ணத்தில் மூன்று குழந்தைகளின் தாயார் சுனிதா தேவி, டையர் டியூபை பிடித்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் படகை நோக்கி முன்னேறினார்.
ஆனால் மூன்று குழந்தைகளுடன் கயிற்றை பிடித்துக் கொண்டு அவரால் படகிற்கு முன்னேற முடியவில்லை. இதனால் அவர் மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்கள் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X