என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறை கட்டி சாதனை
Byமாலை மலர்28 Dec 2016 5:39 AM GMT (Updated: 28 Dec 2016 5:39 AM GMT)
தெலுங்கானாவில் தொழிலாளர்களின் தீவிர பணியால் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டது. 90 நாளில் ஜாகித் யாலா மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நகரி:
நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
இதில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டது. ஜாகித்யாலா மாவட்ட கலெக்டர் சரத் தசை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. மேஸ்திரிகள், கூலி தொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து நடிக்குடி கிராமத்தில் கலெக்டர் சரத், கழிப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் மற்ற கிராமங்களில் கழிப்பறைகள் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஒவ்வொரு கிராமமாக சென்று கழிப்பறை கட்டும் பணியை பார்வையிட்டார். தொழிலாளர்களின் தீவிர பணியால் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டது. 90 நாளில் ஜாகித் யாலா மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
இதில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டது. ஜாகித்யாலா மாவட்ட கலெக்டர் சரத் தசை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. மேஸ்திரிகள், கூலி தொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து நடிக்குடி கிராமத்தில் கலெக்டர் சரத், கழிப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் மற்ற கிராமங்களில் கழிப்பறைகள் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஒவ்வொரு கிராமமாக சென்று கழிப்பறை கட்டும் பணியை பார்வையிட்டார். தொழிலாளர்களின் தீவிர பணியால் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டது. 90 நாளில் ஜாகித் யாலா மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X