என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 நாள் சுற்றுப்பயணமாக சந்திரபாபுநாயுடு இன்று திருப்பதி வருகை
Byமாலை மலர்26 Dec 2016 5:36 AM GMT (Updated: 26 Dec 2016 5:36 AM GMT)
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று திருப்பதிக்கு வருகிறார். அதற்காக அவர், இன்று மாலை 6.30 மணிக்கு விமானம் மூலமாக ரேணிகுண்டா வருகிறார்.
திருமலை:
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) திருப்பதிக்கு வருகிறார்.
அதற்காக அவர், இன்று மாலை 6.30 மணிக்கு விமானம் மூலமாக ரேணிகுண்டா வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருப்பதிக்கு வருகிறார். திருப்பதியில் உள்ள நேரு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் பாலகிருஷ்ணாவின் 100-வது படமான, ‘கவுதமிபுத்ரா சாதகர்மி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, காலை 10 மணியில் இருந்து 11.30 மணிவரை நடக்கும் 99-வது இந்திய பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகிறார். மதியம் 12.30 மணிக்கு திருப்பதியில் இருந்து ரேணிகுண்டா சென்று, அங்கிருந்து விமானத்தில் அமராவதி செல்கிறார்.
இந்தத் தகவல், சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த்ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) திருப்பதிக்கு வருகிறார்.
அதற்காக அவர், இன்று மாலை 6.30 மணிக்கு விமானம் மூலமாக ரேணிகுண்டா வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருப்பதிக்கு வருகிறார். திருப்பதியில் உள்ள நேரு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் பாலகிருஷ்ணாவின் 100-வது படமான, ‘கவுதமிபுத்ரா சாதகர்மி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, காலை 10 மணியில் இருந்து 11.30 மணிவரை நடக்கும் 99-வது இந்திய பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகிறார். மதியம் 12.30 மணிக்கு திருப்பதியில் இருந்து ரேணிகுண்டா சென்று, அங்கிருந்து விமானத்தில் அமராவதி செல்கிறார்.
இந்தத் தகவல், சித்தூர் மாவட்ட கலெக்டர் சித்தார்த்ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X