என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமரிடம் பேசியது என்ன? - டெல்லியில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி
Byமாலை மலர்19 Dec 2016 1:30 PM GMT (Updated: 19 Dec 2016 1:30 PM GMT)
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
புதுடெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழக நலன் தொடர்பான 141 பக்கங்களில் 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் அளித்தார்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வார்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ரூ.22,573 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதில், முதல்கட்டமாக ரூ.1000 கோடி வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம்.
32 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா பல சாதனைகளை, மக்கள் நல திட்டங்களை செய்துள்ளார். அவர் ஆற்றிய சேவையால் உலக அளவில் அவரது பெயர் தனி முத்திரை பதித்திருக்கிறது.
அதனை நினைவு கூறும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா மற்றும் சிலை வைப்பது தொடர்பாக ஆவன செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, தமிழக நலன் தொடர்பான 141 பக்கங்களில் 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் அளித்தார்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வார்தா புயலால் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ரூ.22,573 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதில், முதல்கட்டமாக ரூ.1000 கோடி வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம்.
32 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா பல சாதனைகளை, மக்கள் நல திட்டங்களை செய்துள்ளார். அவர் ஆற்றிய சேவையால் உலக அளவில் அவரது பெயர் தனி முத்திரை பதித்திருக்கிறது.
அதனை நினைவு கூறும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா மற்றும் சிலை வைப்பது தொடர்பாக ஆவன செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X