என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குறும்படம்: யூடியூபில் வெளியானது
Byமாலை மலர்28 Nov 2016 4:14 AM GMT (Updated: 28 Nov 2016 5:04 AM GMT)
இந்தியாவில் முதன்முறையாக ஒரே காட்சியில் படப்பதிவு செய்யப்பட்ட ‘மகள்’ என்ற குறும்படம் பிரபல பொழுதுப்போக்கு வலைத்தளமான யூடியூபில் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்:
கே.எம்.ஆர். ரியாஸ் என்பவரின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகள்’ குறும்படம் சிறுமிகள் மற்றும் இளம்வயது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வல்லுறவு போன்ற சமூகக் கொடுமைகளை கண்டும்காணாமல் போகும் இன்றைய சமுதாயத்தின் அவலத்தை சித்தரிக்கும் விதமான கதையம்சத்துடன் படைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த குறும்படம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அடர்த்தியான காட்டுக்குள் நடக்கும் ஒரு கொடூரமும் (கதை சொன்னால் குறும்படங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும். கீழேயுள்ள ‘லிங்க்’கில் சென்று பார்த்து தெரிந்துகொள்வதுதான் அந்த படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் நாம் செய்யும் கைமாறாக அமைய முடியும்) அந்த கொடூரத்தை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ முன்வராத ஒருவனின் மனசாட்சி பேசும் குரலும் சுமார் ஆறுநிமிட காட்சியாக ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குறும்படம் என்ற பெருமைக்குரிய இந்த முயற்சியில் சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கும் சங்கதி என்ன என்பதை அறிய..,
https://www.youtube.com/watch?v=SMURMrJLu94
கே.எம்.ஆர். ரியாஸ் என்பவரின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகள்’ குறும்படம் சிறுமிகள் மற்றும் இளம்வயது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வல்லுறவு போன்ற சமூகக் கொடுமைகளை கண்டும்காணாமல் போகும் இன்றைய சமுதாயத்தின் அவலத்தை சித்தரிக்கும் விதமான கதையம்சத்துடன் படைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த குறும்படம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அடர்த்தியான காட்டுக்குள் நடக்கும் ஒரு கொடூரமும் (கதை சொன்னால் குறும்படங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடும். கீழேயுள்ள ‘லிங்க்’கில் சென்று பார்த்து தெரிந்துகொள்வதுதான் அந்த படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் நாம் செய்யும் கைமாறாக அமைய முடியும்) அந்த கொடூரத்தை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ முன்வராத ஒருவனின் மனசாட்சி பேசும் குரலும் சுமார் ஆறுநிமிட காட்சியாக ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே காட்சியில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் குறும்படம் என்ற பெருமைக்குரிய இந்த முயற்சியில் சமூகத்துக்கு சொல்லப்பட்டிருக்கும் சங்கதி என்ன என்பதை அறிய..,
https://www.youtube.com/watch?v=SMURMrJLu94
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X