search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் சிறை உடைப்பு: சிறைத்துறை இயக்குனர் சஸ்பெண்ட் - நாபா சிறை சூப்பிரண்ட் டிஸ்மிஸ்
    X

    பஞ்சாப் சிறை உடைப்பு: சிறைத்துறை இயக்குனர் சஸ்பெண்ட் - நாபா சிறை சூப்பிரண்ட் டிஸ்மிஸ்

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நாபா சிறை உடைப்பு சம்பவத்தின் எதிரொலியாக மாநில சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், நாபா சிறைச்சாலையின் சூப்பிரண்ட் மற்றும் துணை சூப்பிரண்ட் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பஞ்சாப் துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
    அமிர்தரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நாபா சிறைச்சாலைமீது போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் உள்பட ஆறுபேர் தப்பியோடி விட்டனர்.

    அவர்களை தேடி, கண்டுபிடித்து, கைது செய்ய மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாபா சிறை உடைப்பு சம்பவத்தின் எதிரொலியாக மாநில சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், நாபா சிறைச்சாலையின் சூப்பிரண்ட் மற்றும் துணை சூப்பிரண்ட் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பஞ்சாப் துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×