என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம் ஆத்மி கட்சியின் 4-வது நிறுவன தினம் - தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து
Byமாலை மலர்27 Nov 2016 3:15 AM GMT (Updated: 27 Nov 2016 3:15 AM GMT)
ஆம் ஆத்மி கட்சியின் 4-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் ஹசாரேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து விலகினார்.
பின்னர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2012-ம் ஆண்டு அரசியலமைப்பு நிறுவன தினமான நவம்பர் 26-ந்தேதி, ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடித்து நாடு முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
தற்போது பிரதான கட்சிகளில் ஒன்றாக உருவாகி இருக்கும் ஆம் ஆத்மியின் 4-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இன்று (நேற்று) அரசியலமைப்பு நிறுவிய தினம். 4 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் கட்சி தொடங்கப்பட்டது. இந்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி நீண்டநாள் வாழட்டும்’ என்று கூறியுள்ளார்.
காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் ஹசாரேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து விலகினார்.
பின்னர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2012-ம் ஆண்டு அரசியலமைப்பு நிறுவன தினமான நவம்பர் 26-ந்தேதி, ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடித்து நாடு முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
தற்போது பிரதான கட்சிகளில் ஒன்றாக உருவாகி இருக்கும் ஆம் ஆத்மியின் 4-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இன்று (நேற்று) அரசியலமைப்பு நிறுவிய தினம். 4 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் கட்சி தொடங்கப்பட்டது. இந்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி நீண்டநாள் வாழட்டும்’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X