என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகையை வைத்து குத்துவிளக்கேற்றியதால் விழாவை புறக்கணித்து வெளியேறிய பினராய் விஜயன்
Byமாலை மலர்26 Nov 2016 5:32 AM GMT (Updated: 26 Nov 2016 5:32 AM GMT)
கொச்சி மாநகர போலீஸ் இலாகா சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மையம் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான அலுவலக கட்டிட திறப்பு விழாவில் நடிகையை வைத்து குத்துவிளக்கேற்றியதால் விழாவை பாதியில் புறக்கணித்து பினராய் விஜயன் வெளியேறினார்.
திருவனந்தபுரம்:
கொச்சி மாநகர போலீஸ் இலாகா சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மையம் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று கொச்சியில் நடந்தது.
இந்த விழாவில் முதல்-மந்திரி பினராய் விஜயன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழிலும் அவரது பெயரே அச்சிடப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று விழா தொடங்கியதும் முதல்-மந்திரி பினராய் விஜயன் நிகழ்ச்சிக்கு சென்றார். போலீஸ் கமிஷனர் தினேஷ் அவரை வரவேற்று மேடையில் அமர வைத்தார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் குத்து விளக்கேற்ற முதல்-மந்திரி பினராய் விஜயனை அழைப்பதற்கு பதில், நடிகை ஷீலா குத்து விளக்கேற்றுவார் என்றார். இதைகேட்டதும் முதல்-மந்திரியின் முகம் மாறியது.
அடுத்து கட்டிட திறப்பு விழா என்று கூறிய தொகுப்பாளர், புதிய கட்டிடத்தை பெண் ஏ.டி.ஜி.பி. சந்தியா திறந்து வைப்பார் என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி பினராய்விஜயன் மேடையில் இருந்து எழுந்தார். உடனே கமிஷனர் தினேஷ் அருகில் சென்று அவரை சமரசம் செய்தார்.
பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் பெண்களை வைத்து குத்து விளக்கு ஏற்றல் மற்றும் கட்டிட திறப்பை நடத்தியதாக கூறினார். இதைக்கேட்டு சமரசம் அடையாத முதல்-மந்திரி நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியில் வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சி மாநகர போலீஸ் இலாகா சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மையம் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று கொச்சியில் நடந்தது.
இந்த விழாவில் முதல்-மந்திரி பினராய் விஜயன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழிலும் அவரது பெயரே அச்சிடப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று விழா தொடங்கியதும் முதல்-மந்திரி பினராய் விஜயன் நிகழ்ச்சிக்கு சென்றார். போலீஸ் கமிஷனர் தினேஷ் அவரை வரவேற்று மேடையில் அமர வைத்தார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் குத்து விளக்கேற்ற முதல்-மந்திரி பினராய் விஜயனை அழைப்பதற்கு பதில், நடிகை ஷீலா குத்து விளக்கேற்றுவார் என்றார். இதைகேட்டதும் முதல்-மந்திரியின் முகம் மாறியது.
அடுத்து கட்டிட திறப்பு விழா என்று கூறிய தொகுப்பாளர், புதிய கட்டிடத்தை பெண் ஏ.டி.ஜி.பி. சந்தியா திறந்து வைப்பார் என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி பினராய்விஜயன் மேடையில் இருந்து எழுந்தார். உடனே கமிஷனர் தினேஷ் அருகில் சென்று அவரை சமரசம் செய்தார்.
பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் பெண்களை வைத்து குத்து விளக்கு ஏற்றல் மற்றும் கட்டிட திறப்பை நடத்தியதாக கூறினார். இதைக்கேட்டு சமரசம் அடையாத முதல்-மந்திரி நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியில் வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X