என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போராட்டத்தில் போலீசாருக்கு மிரட்டல்: கேரள மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் ஜெயில்
Byமாலை மலர்25 Nov 2016 11:31 AM GMT (Updated: 25 Nov 2016 11:31 AM GMT)
போராட்டத்தின் போது போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கேரள மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலசேரி தொகுதி எம்.எல்.ஏ. ஷாம்சீர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு கண்ணூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியதாக ஷாம்சீர் மீது கண்ணூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் புகார் செய்தார். அதன்பேரில் கேரள போலீஸ் சட்டம் சி பிரிவின் கீழ் மார்க்சிஸ்டு கட்சியை சேர்ந்த ஷம்சீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கண்ணூர் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் ஷம்சீருக்கு 3 மாத ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை எதிர்த்து ஷம்சீர் கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்வார் என தெரிகிறது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலசேரி தொகுதி எம்.எல்.ஏ. ஷாம்சீர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு கண்ணூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியதாக ஷாம்சீர் மீது கண்ணூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் புகார் செய்தார். அதன்பேரில் கேரள போலீஸ் சட்டம் சி பிரிவின் கீழ் மார்க்சிஸ்டு கட்சியை சேர்ந்த ஷம்சீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கண்ணூர் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் ஷம்சீருக்கு 3 மாத ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை எதிர்த்து ஷம்சீர் கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்வார் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X