என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் ரேஷன் கடையை கொள்ளையடித்த பொதுமக்கள்
Byமாலை மலர்13 Nov 2016 12:17 AM GMT (Updated: 13 Nov 2016 12:17 AM GMT)
மத்திய பிரதேசத்தில் சில்லரை நோட்டுகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
சத்தர்பூர்:
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால், மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் மேற்படி நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு அலைந்து வருகின்றனர். ஆனால் 3 நாட்களுக்கு மேல் ஆகியும் பல இடங்களில் இந்த பணத்தை மாற்ற முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க சில்லரை இல்லாததால் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூருக்கு அருகே உள்ள பர்தகா கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலரும் இவ்வாறு பாதிக்கப்பட்டு இருந்தனர். சில்லரை நோட்டுகள் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர் போலீசில் புகார் செய்தார்.
எனினும் இந்த சம்பவத்தை மறுத்துள்ள போலீசார், அந்த கடையில் கடந்த 4 மாதங்களாக பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடை ஊழியர்களிடம் லேசான தகராறில் மட்டுமே ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X