என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம்: கேரளாவுக்கு, 24-ந்தேதி பிரதமர் மோடி வருகை
By
மாலை மலர்21 Sep 2016 4:39 AM GMT (Updated: 21 Sep 2016 4:39 AM GMT)

பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக வருகிற 24-ந்தேதி அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோழிக்கோடு வருகிறார்.
திருவனந்தபுரம்:
பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வருகிற 23, 24, 25-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக வருகிற 24-ந்தேதி அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோழிக்கோடு வருகிறார். அவருடன் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு அவரது விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரை இறங்குகிறது.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி கோழிக்கோடு விக்ரம் மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் செயற்குழு கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு செல்கிறார். மாலை 5 மணிக்கு செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
மறுநாள் 25-ந்தேதியும் பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அன்று காலை பிரதமர் முன்னிலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியாரின் ராமாயண நாட்டிய நடனம் இடம்பெறுகிறது. அதை தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் ஜனசங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பாரதிய ஜனதாவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் மற்றும் தியாகிகளை நரேந்திர மோடி கவுரவிக்கிறார். அவர்களுடன் ஓண விருந்தும் சாப்பிடுகிறார். இந்த செயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா முதல்- மந்திரிகள், தேசிய தலைவர்கள், கேரள மாநில நிர்வாகிகள் என்று பலர் பங்கேற்கிறார்கள்.
உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இது பற்றியும் தேசிய செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கூட்டம் முடிந்ததும், 25-ந்தேதி இரவு தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திரமோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் கோழிக்கோடு வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அதிரடிப்படை, தேசிய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தேசிய பாதுகாப்புபடை அதிகாரிகள் கோழிக்கோடு வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வருகிற 23, 24, 25-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக வருகிற 24-ந்தேதி அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோழிக்கோடு வருகிறார். அவருடன் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு அவரது விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரை இறங்குகிறது.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி கோழிக்கோடு விக்ரம் மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் செயற்குழு கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு செல்கிறார். மாலை 5 மணிக்கு செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
மறுநாள் 25-ந்தேதியும் பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அன்று காலை பிரதமர் முன்னிலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியாரின் ராமாயண நாட்டிய நடனம் இடம்பெறுகிறது. அதை தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் ஜனசங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பாரதிய ஜனதாவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் மற்றும் தியாகிகளை நரேந்திர மோடி கவுரவிக்கிறார். அவர்களுடன் ஓண விருந்தும் சாப்பிடுகிறார். இந்த செயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா முதல்- மந்திரிகள், தேசிய தலைவர்கள், கேரள மாநில நிர்வாகிகள் என்று பலர் பங்கேற்கிறார்கள்.
உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இது பற்றியும் தேசிய செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கூட்டம் முடிந்ததும், 25-ந்தேதி இரவு தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திரமோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் கோழிக்கோடு வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அதிரடிப்படை, தேசிய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தேசிய பாதுகாப்புபடை அதிகாரிகள் கோழிக்கோடு வந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
