என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமானத்திற்குள் ஊழியர்கள் செல்பி எடுக்கக்கூடாது: விமான போக்குவரத்து இயக்குனரகம் புது உத்தரவு
Byமாலை மலர்16 Sep 2016 5:07 AM GMT (Updated: 16 Sep 2016 5:07 AM GMT)
விமானத்திற்குள் ஊழியர்கள் செல்பி எடுக்கக்கூடாது என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:
விமானத்திற்குள் முன் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக்கூடாது என ஏற்கனவே சட்டம் உள்ளது. இப்போது செல்போன், ஐபாட் என பல கருவிகளில் புகைப்படம் எடுக்கும் வசதிகள் உள்ளதால் பலரும் ‘செல்பி’ எடுத்துவருகிறார்கள். விமானத்தில் விமானிகளின் அறையில் சில விமானிகள் புகைப்படம் எடுப்பதால் அவர்களது கவனம் சிதறுவதாக தெரியவந்தது. சமீபத்தில் ஒரு பயிற்சி விமானத்தில் விமானி ‘செல்பி’ எடுத்தபோது விபத்தில் முடிந்தது.
இதனால் விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான நிறுவனங்களுக்கு ஒரு புதிய உத்தரவை அனுப்பியது. அதில், எந்தவிதமான விமானத்திலும் விமானிகளோ, விமான ஊழியர்களோ புகைப்படம் எடுக்கக்கூடாது. பயணிகளும் விமானத்தில் ஏறும்போதோ, அல்லது இறங்கும்போதோ புகைப்படம் எடுக்கக்கூடாது. இதனை அனைத்து விமான நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
விமானத்திற்குள் முன் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக்கூடாது என ஏற்கனவே சட்டம் உள்ளது. இப்போது செல்போன், ஐபாட் என பல கருவிகளில் புகைப்படம் எடுக்கும் வசதிகள் உள்ளதால் பலரும் ‘செல்பி’ எடுத்துவருகிறார்கள். விமானத்தில் விமானிகளின் அறையில் சில விமானிகள் புகைப்படம் எடுப்பதால் அவர்களது கவனம் சிதறுவதாக தெரியவந்தது. சமீபத்தில் ஒரு பயிற்சி விமானத்தில் விமானி ‘செல்பி’ எடுத்தபோது விபத்தில் முடிந்தது.
இதனால் விமான போக்குவரத்து இயக்குனரகம் விமான நிறுவனங்களுக்கு ஒரு புதிய உத்தரவை அனுப்பியது. அதில், எந்தவிதமான விமானத்திலும் விமானிகளோ, விமான ஊழியர்களோ புகைப்படம் எடுக்கக்கூடாது. பயணிகளும் விமானத்தில் ஏறும்போதோ, அல்லது இறங்கும்போதோ புகைப்படம் எடுக்கக்கூடாது. இதனை அனைத்து விமான நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X