என் மலர்
செய்திகள்

கொல்கத்தாவில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: 2 டாக்சி டிரைவர்கள் கைது
கொல்கத்தாவில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 டாக்சி டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா புராபஜார் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி தாயாருடன் வசித்து வந்தார். அவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பாத்திரங்களை சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார். இன்று காலை டாக்சி டிரைவர்கள் சிலர் காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் அந்த பெண்ணை கொலை செய்து பார்க் சர்க்கஸ் பகுதியில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், விரைந்து சென்று, பெண்ணின் உடலை மீட்டனர். தொடர்ந்து, கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட வாகன எண்ணை அடையாளம் வைத்து, இந்த கொடூரத்தை செய்த, சங்கர் ஷா மற்றும் குட்டு சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் ஓலா கால்டாக்சி டிரைவராக உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா புராபஜார் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி தாயாருடன் வசித்து வந்தார். அவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பாத்திரங்களை சுத்தம் செய்யும் பணி செய்து வந்தார். இன்று காலை டாக்சி டிரைவர்கள் சிலர் காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் அந்த பெண்ணை கொலை செய்து பார்க் சர்க்கஸ் பகுதியில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், விரைந்து சென்று, பெண்ணின் உடலை மீட்டனர். தொடர்ந்து, கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட வாகன எண்ணை அடையாளம் வைத்து, இந்த கொடூரத்தை செய்த, சங்கர் ஷா மற்றும் குட்டு சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் ஓலா கால்டாக்சி டிரைவராக உள்ளார்.
Next Story