என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டும், கற்கள் அல்ல: ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்20 Aug 2016 11:31 PM GMT (Updated: 20 Aug 2016 11:31 PM GMT)
காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டுமே தவிர, கற்கள் அல்ல என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
லக்னோ:
காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானியும், அவரது ஆதரவாளர்களும் கடந்த மாதம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த வன்முறை மற்றும் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 60-க்கும் அதிகமானோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டுமே தவிர, கற்கள் அல்ல என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் தலைநகரில் உள்ள லக்னோ பல்கைலைக் கழகத்தில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் கைகளில் கற்கலுக்கு பதிலாக பேனாக்கள், புத்தகங்கள் மற்றும் கணினி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிலர் தங்களுடைய சுயநல அரசியலுக்காக கஷ்மீர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கற்களை எடுக்க வைக்கிறார்கள். இது அவர்களுடைய எதிர்காலத்தில் விளையாடுவதாகும்.
எந்த தந்தை தன் குழந்தைகளிடம் அல்லது இளைஞர்களிடம் படிப்பை கைவிட்டு கற்களை எடுக்குமாறு சொல்வார்?
இந்த குழந்தைகள் அப்பாவிகள். இந்திய நாட்டின் குழந்தைகள். காஷ்மீரில் பிரச்சனை உள்ளது என்றால் அதனை ஆர்ப்பாட்டத்தின் வழியில் தீர்க்க முடியாது. காஷ்மீர் மாநில மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு பரஸ்பர கலந்துரையாடலே ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானியும், அவரது ஆதரவாளர்களும் கடந்த மாதம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த வன்முறை மற்றும் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 60-க்கும் அதிகமானோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் புத்தகங்கள் இருக்க வேண்டுமே தவிர, கற்கள் அல்ல என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் தலைநகரில் உள்ள லக்னோ பல்கைலைக் கழகத்தில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் கைகளில் கற்கலுக்கு பதிலாக பேனாக்கள், புத்தகங்கள் மற்றும் கணினி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிலர் தங்களுடைய சுயநல அரசியலுக்காக கஷ்மீர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கற்களை எடுக்க வைக்கிறார்கள். இது அவர்களுடைய எதிர்காலத்தில் விளையாடுவதாகும்.
எந்த தந்தை தன் குழந்தைகளிடம் அல்லது இளைஞர்களிடம் படிப்பை கைவிட்டு கற்களை எடுக்குமாறு சொல்வார்?
இந்த குழந்தைகள் அப்பாவிகள். இந்திய நாட்டின் குழந்தைகள். காஷ்மீரில் பிரச்சனை உள்ளது என்றால் அதனை ஆர்ப்பாட்டத்தின் வழியில் தீர்க்க முடியாது. காஷ்மீர் மாநில மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு பரஸ்பர கலந்துரையாடலே ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X